search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணாடிகள் உடைப்பு"

    • குடியாத்தத்தில் பரபரப்பு
    • மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது

    குடியாத்தம்:

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் பல ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டு பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வட மாநில கொள்ளையர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதனையடுத்து ஏ.டி.எம். மையங்கள் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி அதிகரிக்கப்பட்டது.

    கடந்த மாதம் குடியாத்தம் நேதாஜிசவுக் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கிஏ.டி.எம்.மில் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கற்களைக் கொண்டு ஏடிஎம் கண்ணாடிகளை உடைத்தார். அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்து போலீசார் விரைந்து வந்து கற்களால் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடி உடைத்த நபரை பிடித்து விசாரித்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணைக்கு பின் அந்த நபரை விரட்டி விட்டனர். குடியாத்தம் பகுதியில் ஏடிஎம் எந்திரம் கல்லால் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்.
    • தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:, அக்.25-

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தலித் வளவன் என்பவருக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று தலித்வளவன் உள்ளிட்ட 6 பேர் குடிபோதையில் அன்பழகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தலித் வளவனை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலித் வளவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் தலித் வளவன், தமிழ், விக்கி உள்ளிட்ட 6 பேர் மீதும், தலித் வளவன் கொடுத்த புகாரின் பேரில் பால்ராஜ், திலீப், அஜித், சதீஷ் என மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்கடலூர் அருகே பில்லாலி தொட்டி சேர்ந்தவர் குரு (வயது 23) இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் நத்தப்பட்டு கஷ்டம்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது குடிபோதையில் நின்று கொண்டிருந்த 3 நபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் குருவை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பாவாடைராயனை 3 பேர் தாக்கினர். இந்த மோதலில் குரு மற்றும் பாவாடைராயன் ஆகியோர் காயம் அடைந்து கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து குரு கொடுத்த புகாரின் பேரில் நத்தப்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் பாவாடைராயன், அறிவழகன், முருகன் மற்றும் பாவாடைராயன் கொடுத்த புகாரின் பேரில் பில்லாலி தொட்டி சேர்ந்தவர்கள் குரு, வசந்தகுமார், சாலக்கரையை சேர்ந்த ராமு என 6 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரத்தில் இன்று பரபரப்பு 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
    • மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.

    சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.

    இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிநோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×